Monday 28 April 2014

பிரபுதேவாவின் சம்பளம்!!அதிர்ச்சியில் திரையுலகம்!!!

இந்தியாவின் நம்பர் 1 நடன இயக்குனர் பிரபுதேவா. இவர் ஹிந்தி சினிமாவின் முன்னணி இயக்குனர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இவரின் சம்பளம் என்ன என்று கேட்டால் தலை சுற்றி விடும் உங்களுக்கு!!!

நடன புயல் அடுத்த படத்தை இயக்க ரூ. 30 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன மூலம் பாலிவுட்டில் மிக அதிகம் சம்பளம் வாங்கிய இயக்குனர் ரோஹித் ஷெட்டியை பிரபுதேவா
முந்திவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பாலிவுட்டில் இதுவரை 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வந்தவர் ரோஹித் ஷெட்டி மட்டுமே. இவரை பின்னுக்கு தள்ளிவிட்டார் இயக்குனர் மற்றும் நடன அமைப்பாளர் பிரபுதேவா. அடுத்து இவர் இயக்கவுள்ள படத்திற்கு ரூ.30 கோடி பேசப்பட்டு, ரூ.17 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை கேள்விப்பட்ட பாலிவுட் மட்டும் இன்றி இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்து விட்டது. ஏனெனில் இது ஒரு கதாநாயகனுக்கு நிகரான சம்பளம்.

“பல்லு இருப்பவர் பக்கோடா சாப்பிடுகிறார் ”

No comments:

Post a Comment